Kavithai Index

Tamil Kavithai Database - Copied Kavithai From Tamil Kavithai Sites, Facebook and Twitter Profiles.

Tamil Twitter Kavithai and தமிழ் கவிதைகள்

Disclaimer

All Kavithai and Quotes are Copied from Different Social Profiles and Pages we have not Owned any date or Content it's Just a Database for collecting My Favourite Tamil SMS and Tamil Kavithai.

it contains Tamil kavithai and Tamil Quotes From Different Categories. All are Copied from Twitter Profiles.

Tamil Kavithai Database

எத்தகைய
இன்னல்கள் வந்தாலும்
எப்பொழுதும் சிறந்த சிந்தனையுடனும்
மற்றும் உயர்ந்த எண்ணங்களும்
நம்மை நிலையாக வாழ
வழி வகுக்கும்


அன்பு காட்டும்
பெண்ணிடமிருந்து
சற்று விலகியே இருங்கள்
ஒருநாள்
அன்பு காதலாக
மாறிவிடும்


மாயோனின்
மாய பேரழகு
மெல்ல
புன்னகைக்கும்
மயில்
தோகையில் ஒளிந்திருக்கிறது


வாழ்க்கை உன்னை
எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும்
நினைவில் வைத்துக்கொள்
நீ படும் கஷ்டமெல்லாம்
உன்னை சிறந்த மனிதனாக
மாற்றுவதற்கே என்று


சொற்களில்
அன்பானது வாழ்த்துகள்
தெரிவிப்பது
சொற்களில்
அழகானது வாழ்த்துகளை
பகிர்ந்துகொள்வது


எட்ட நின்றாலும்
என் இதயம்
உனக்காக துடிக்குமடா
நீ மறைந்தாலும்
உன் முகம்
என் மனதில் மலருமடா


இடைவெளியில்லாமல்
எழுதப்பட்ட
எந்த ஒரு வாக்கியத்திற்குள்ளும்
புரிதல்கள் அவ்வளவாய் இருப்பதில்லை


உடலில்
இரு கைகளும்
இல்லாத நிலையில் கூட மனதில்
நம்பிக்கை
இருந்துவிட்டால்
எந்த செயலும்
எளிதில் முடித்துவிடலாம்


வாழ்க்கையில்
முன்னேற
நரியின் தந்திரம்
எந்த வழியிலும்
சம்பாதிக்க
ஓநாயின் வெறி
மொத்ததில்
விலங்குகளின்
சங்கமம் மனிதன்


விடாமுயற்சி எனும்
வாகனம் ஏறி
உழைப்பு எனும்
ஓட்டுநர் துணையுடன்
தன்னம்பிக்கையுடன்
பொறுப்புகளை சுமந்து
தன்னிறைவு காண்பதே
நம் பயண இலக்கு


வாழ்க்கை என்பது வாழத்தான்
வசந்தகாலம் என்பது நம்
எண்ணம் தான்
மகிழ்ச்சி என்பது ஒரு வகை
பயிற்சிதான் பழகிவிட்டால்
வாழ்க்கை என்றும் மகிழ்ச்சி தான்


அன்பு
நமக்கு
பலமாகவும் சில நேரங்களில்
பலவீனமாகவும்
மாறிவிடுகிறது


உட்கார்ந்தபடி
உலகின்
மூலைமுடுக்கெல்லாம்
அழைத்துச்செல்லும்
அற்புத பாதை புத்தகம்


எதையும் நான் கடப்பேன்
தடைகளை தகர்ப்பேன்
தயங்காமல் நான் நடப்பேன்
துன்பத்தை தொலைப்பேன்
இன்பத்தை அணைப்பேன்
வாழ்க்கையை என்வசம்
வளைப்பேன் அனைவரையும்
அன்பென இணைப்பேன்


உதிர்ந்து கிடந்த
பூக்கள் அழகு
கூட்டும் போது தான்
குப்பையாகிவிட்டது


தன்னம்பிக்கை இல்லாதவரை
நம்புவதே இருபக்க தோல்வி


அன்பானவர்கள்
கூறும் ஒற்றை
வார்த்தையால்
கரைந்து போகிறது
அத்தனை காயங்களும்


ஆசைகளால் மட்டுமே
அலங்கரிக்கப் பட்ட
என் அக ரதத்தில்
அழகாக வலம் வரும்
அகிம்சை ராணியவள்


பிழையில்லா
கவி ஒன்றை
எழுத முயல்கிறேன்
அவள் வெட்க சிரிப்பினை
கண்டதும்
வீழ்ந்துவிடுகிறேன்


உன்னுடைய காத்திருப்புக்கள்
ஒவ்வொரு நாளும் என்னை
எதோ ரணம் செய்கிறது
சிறு சலிப்பு ஏதும் இல்லாமல்
மணிக்கணக்கில் காத்திருக்க
என் தவம் செய்தேனோ கண்ணே


ஒருவர் மீது
அதிக அன்பு
வைத்திருப்பதை
நிரூபிக்க மற்றொருவரின்
மனதைக் காயப்படுத்தி
விட்டு செல்கின்றனர் சிலர்


அதிகாரத்தால்
விலைக்கு
வாங்க முடியாததில்
முதன்மையானது
பெண்மையின் அன்பு


வர்ணிக்கப்பட்டுக் கொண்டே
இருப்பதாலோ என்னவோ
வசப்பட்டுக் கொண்டே
இருக்கிறேன்
அவள் அழகில்


நிகழும் என்று
எத்தனை வேண்டுமானாலும்
இருந்துவிட்டு போகட்டும்
இப்போது நிகழ்வதொன்றே
அவசியப்பட்டது


விருப்பத்திற்கு
விடும் போது
மகிழ்வை தரும்
விசயங்கள்
விருப்பத்திற்கு
உட்படுத்தும் போது
மகிழ்வை
தருவதில்லை


பேசிப் பேசியே
ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம் பொய்
அவர்களது பேச்சில்
நாம் ஏமாந்து விடுகிறோம்
என்பது தான் உண்மை


தேனீரை
அருந்திக்கொண்டு
படிப்பது பேரழகு
ரசனைகள்
மிகுந்த வரிகளை
உன்னை பருகிக்கொண்டு
வாசிப்பது ஆனந்தமே


சிந்தித்துக் கொண்டே
இருப்பவர்கள்
சிதறடிக்கொண்டே
இருக்கிறார்கள்
வாழும் நொடிகளை


புரியாமல் தடம்மாறி
திரிவோருக்கு
புரியவைக்க வாய்ப்பு
கிடைத்தால்
கட்டாயம் முயற்சி செய்துவிடு
நம் பக்க குறைகளையாவது
குறைத்துக் கொள்ளலாம்


இதழ் தீண்டி
காயம் செய்கிறாய்
பூவிதழ் மேல் கொட்டும்
சோவேன்னும் மழை


நோட்டமிடும் விழிகளுக்கு
நீ தூரமாகிப் போனாலும்
மனக் கதவினுள் அடைபட்டு
நெருங்கியே இருக்கிறாய்


தழுவிக்கொள்ளும்
ஆசைகளின்
பாரம் தாங்கும் மனதிற்கு
காத்திருக்கும் நிகழ்தலின்
சுவாரஸ்யம் அறிந்திட
அத்தனை ஆவல்


கூட்டுக்குள்
தவமிருந்து பெற்ற
இறகுகளால் வானத்தை
அளவிடுகிறது
பட்டாம்பூச்சி
அதன் அழகில்
களைகிறது இவன்
தவம்


உறவுகள்
இரண்டு வகை
ஒன்று அன்பை தரும்
மற்றொன்று
அனுபவத்தை தரும்
அன்பைத் தரும் உறவை
மனதில் வை
அனுபவத்தை தரும் உறவை
நினைவில் வை


வீதி முனை
கடக்கும் வரை
மீண்டு வரும்
பார்வைக்காக
காத்திருக்கும்
அந்நொடிகள்
காதல்'தனின்
அனிச்சை செயலோ


உள்ளுக்குள்
ஓலமிடும்
ஓராயிரம்
நினைவுகளை
உள்ளடக்கி
பூத்துச் சிரிக்கும்
ஒற்றை புன்னகைப் போல்
தருவதில்லை
உலகில் உயர்ந்த
பலத்தை எதுவும்


அவனோடு
விரல் கோர்த்து
நீண்ட உரையாடல் போதும்
எல்லாம் சரியாகிவிடும்
அவன் என் எல்லாமுமானவன்


மனக் குமுறல்கள்
ஆயிரம்
இருப்பினும்
சில மௌனங்கள்
மட்டும்
மனதை விட்டு
கலைவதேயில்லை


ஒருவரிடம் மிகுதியாய்
கொட்டப்படும் பேரன்பு
மகிழ்ச்சியை தருகிறதோ
இல்லையோ மிகுந்த
ஏமாற்றத்தை தருகிறது


அவன்
என் வண்ணத்து பூச்சி
நினைத்த நொடியில் ஸ்பரிசித்து
வண்ணம் பூசி
எண்ணம் எங்கும்
வியாபித்து செல்லும்
என் வண்ணத்து பூச்சி

**

உன் உதடுகள்
உச்சரிக்கும் வரை
என் பேனா
எழுதிக் கொண்டே
இருக்கும்
கவிதைகளை


அனைத்துக்கொள்
பத்திரமாக சிறு பிள்ளைபோல
உன்னை பிடித்துக்கொள்கிறேன்


தேகம் திருப்பி படுத்து
என் ராத்திரி நினைவுகளில்
மேகம் போல் உலா வரும்
ஏகாந்த ராகம் அவள்


நீரைவிட்டு
பிரிந்த மீனின்
நிலமை தான்
அவளை
காணாத பொழுதுகளும்


பிறரால்
நேசிப்படாத
உயிர்கள் எல்லாம்
சபிக்கப்பட்டவை
தான் போல


சிலருக்கு சிலவற்றை
இறைவன் தாமதமாக
கொடுத்தாலும்
தரமானதகவே
கொடுப்பார்


அடுத்தவரை ஏமாற்றி
சந்தோஷமாக இருக்கலாம்
அந்த சந்தோசம்
தான் ஏமாறும்
வரை மட்டுமே


சட்டென
தீ பிடிக்கும்
என் இதயத்திற்க்கு
அடைமழையாய்
பொழிந்து
அணைத்திடும்
அவளின்
அன்பு வேண்டும்


அன்பு செய்யுங்கள்
உதவி செய்யுங்கள்
முடிந்ததைச் செய்யுங்கள்
ஆனால் நிபந்தனையை
ஏற்படுத்தாதீர்கள்


உன் தனிமை ஒன்றே
நீ யார் என்பதை
உனக்கு உணர்த்தும்


விழியின் ஓரம்
தோன்றி மறையும்
சிறு துளி நீரும்
உனக்காக என்று
நான் எவ்வாறு
உணர வைப்பேன் உன்னை


சிறு புன்னகையுடன்
நல்லா இருக்கேனு
நகர்ந்து விடுங்கள்
யாருக்கும் உங்கள்
கதை கேட்க நேரம்
இல்லை இந்த இயந்திர உலகில்


மற்றவர்கள் சந்தோஷத்திற்காக
உன்னுடைய சந்தோசத்தை
இழப்பது தியாகம் அல்ல
அது ஆகசிறந்த முட்டாள்தனமே


நல்ல நாள்
சந்தோசம் தரும்
கெட்ட நாள்
அனுபவம் தரும்
மோசமான நாள்
பாடம் கற்று தரும்
எனவே எல்லா நாளும்
இனிய நாள் தான்


கதைக்கும் காற்றின்
கவிகளை படித்தேன்
கனவே என் விழிகள்
முட்ட வா நினைக்கும்
உன் இதயம் கண்டு
நிம்மதியின் நிறங்கள்
சுமந்தேன்


நீ பிரிந்து போவாய்
என தெரியும்
ஆனால்
இப்படி மறந்து போவாய்
என்று நான் கனவில் கூட
எதிர்பார்க்கவில்லை தான்


சில அனுபவங்கள்
மட்டுமல்ல
சிலரின் வார்த்தைகளும்
நம் வாழ்க்கையை செதுக்கும்


எந்த ஒரு சூழ்நிலையிலும்
உன் உள்ளத்தை தெளிவாக
வைத்துக்கொள். அது ஒன்றே
உன்னை மீட்டெடுக்கும்
மிகப்பெரிய சக்தி


எதுவுமற்றவர்களிடமே
கருணையின் சதவிகிதம்
கூடுதலாக இருக்கும்


அவள் சிறு மெளனமே
எனக்கான காலம்
இதழ் பதிக்க இடமளித்த
அவள் கண்ணமே
எனக்கான உலகம்
இடை விழுந்து இடைபடாமல்
இருக்கவே இருக பற்றும்
அவள் இடையே
எனக்கான உயிர்


கேட்குற நேரத்துல
கொடுத்தால் தான்
பலரிடம் நல்லவனாக
இருக்க முடிகிறது
நம்மிடம் இல்லாததை பற்றி
அவர்களுக்கு கவலையில்லை


வெற்றி என்பது
முடிவல்ல
அடுத்த நிலையின்
தொடக்கப் புள்ளி


ஏமாந்தது வருத்தம்
தரவில்லை
ஆனால் உண்டு
குடித்து உறங்கி
கூடவே இருந்த
போது அடையாளம்
காண தவறி விட்டேன்
என்பது தான்
மிக மிக
வருத்தம் தருகிறது


என்போல்
பலரின் அதிகப்படியான
ஆசையெல்லாம் கூச்சலிட்டு
அழும் தருணங்களில்
எல்லாம் இவ்வுலகமே
செவிடாகிவிட வேண்டும்
என்பது மட்டுமே


ரசிக்கப்படும் அழகான
பொய்கள் கூட
வாழ்க்கையின்
சுவாரஸ்யங்கள்


எதிர்பாரா நேரத்தில்
ஏற்படும் இதழின்
சுவையும் இனிமையே


வாழ்வில்
போராட்டங்களே
அதிகமாகி போன போது
சொர்க்கமே
கையில் வந்தாலும்
சாதரணமாகவே
தெரியும்


தடைகளை கண்டு
தயங்காதே
தகர்த்து முன்செல்
வெற்றி
தாமதம் ஆனால்
உனதே


நேசிக்க யாருமில்லாத போது
ம்மை யோசிக்க வைக்கிறது
இந்த வாழ்க்கை


எனக்கான
செல்வம் நீ
எனக்கான
சொந்தம் நீ


சில ஏமாற்றங்கள்தான்
வாழ்க்கையின் புதியபாதை


கோபத்தில் நிதானமும்
குழப்பத்தில் அமைதியும்
துன்பத்தில் தைரியமும்
தோல்வியில் பொறுமையும்
வெற்றியில் தன்னடக்கமும்
வாழ்க்கையை இனிதாக்கும்


மற்றவர்களின் சந்தோஷத்துக்காக
நம்மை நாம்
கஷ்டப்படுத்திக் கொள்வது
எந்த விதத்திலும்
நன்மையை தந்து விடாது


சுயநலவாதியாக
இருப்பவர்கள் எல்லாம்
வரம் வாங்கி வந்தவர்கள்
வாழ்க்கையை முழுமையாக
வாழ கற்றவர்கள்


கொட்டித் தீர்க்கும்
உன் நேச மழைக்காக
கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கும்
தீ என்னுள்


பாதையின் முடிவு
தெரியாத பயணம்
வாழ்க்கை


சிந்தனைகள்
அழகானால்
செயல்களும்
அழகு பெறும்


உயிருக்கு உயிராக
நேசிக்கவும்
உண்மையான
உணர்வுகளுடன்
நேசிக்கவும்
ஒரு சிலரால்
மட்டுமே முடியும்


அன்பின் மொழி
தன் வலிமை
துறத்தல்


தேடாமல் நீ
கிடைத்தாய்
தெரிந்தே
தொலைக்க
விருப்பமில்லை


கடிகார முட்களின்
ஒவ்வொரு நகர்விழும்
பொத்தல்கள் விழுந்து
கொண்டே இருக்கும்
காத்திருப்பில் கட்டுண்டு
கிடக்கும் மனதிற்குள்


கொட்டித் தீர்க்கும்
உன் நேச மழைக்காக
கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கும்
தீ என்னுள்


ஒரு பெண்
தேவதை ஆவதும்
தேவையில்லாமல் ஆவதும்
அவள் சந்திக்கும்
ஆண் கையில்
தான் இருக்கு என்பது
நிதர்சனமான உண்மை


எப்போதும் எதார்தங்கள்
அழகானவை
எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி
வாழ்க்கையின் நொடிகளை
அழகாய் நகர்த்தி செல்லும்


பணம் பெயர் புகழ்
வந்த பின்பும்
இயல்பு மாறாத
மனித பண்புகள்
என்றும்
அழியாத சொத்துக்கள்


அன்புக்கு ஆண் பெண்
வேறுபாடு வயது வரம்பு
தேவையில்லை
உண்மையான மனமும்
வஞ்சகமில்லா நட்பும்
இயல்பான புரிதலும்
நேர்த்தியான ஒழுக்கமும்
போதும்


கடினமான
பாதைகள் தான்
அழகான
இடங்களுக்கு
அழைத்துச் செல்லும்


பிடித்தவர்களை
எதிர்பாராமல்
எதிரில் பார்ப்பது
மகிழ்ச்சியின் உச்சம்


கோபப்படும்
உரிமை இழக்கப்பட்ட
இடத்தில்
அன்பிற்கு அர்த்தம்
இல்லை


இரவு வானின்
அமைதியை
அனுபவிக்க
தெரிந்தவனுக்கு
தனிமை
என்பது வரம்


யாருமறியா முகம்
அனைவரிடமும் உண்டு
அது தெரியும்
வரை தான்
நீயும் நானும்
நல்லவர்கள்


நோகடிப்பவர் களை
நேசிக்கலாம்
நேசிப்பவர்களை
ஒரு போதும்
நோகடிக்கக் கூடாது


மறுக்கப்பட்ட அன்பும்
விடுபட்டுப் போன
வாழ்க்கையும்
மரணத்தை விடவும்
கொடுமையானது


வலிகளை சிறிதும்
வெளிக்காட்டாமல்
ஒற்றைக் கண்ணீரில்
மறைத்துவிடுபவர்கள்
இங்கு பலர்


எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி
எதார்த்தத்தை உணர்ந்து
வாழ காற்றுக்கொள்ள வேண்டும்
ஏமாற்றமாவது
இல்லாமல் இருக்கலாம்


உன்னிடத்தில்
நான் யார் என்பது
நீ நடந்து
கொள்ளும் விதத்தை
பொறுத்தே அமையும்


நம்மை விட்டு
தொலைந்து போக
நினைக்கும் உறவுகளுக்கு
நாம் தேவை
இல்லை என்பதைவிட
அவர்களுக்கு தேவையான
ஏதோ நம்மிடம் இல்லை
என்பதே உண்மை


இறுதி வரை
விடையின்றி
புதிராய் நீளும்
இந்த வாழ்க்கையின்
இறுதி விடை
மரணம்


தலையணையே அறியும்
நமது கனவுகளையும்
கண்ணீரையும்


நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி
மரணம் வரை


இரவு முடிந்த பொழுதும்
விடிந்தும் வெளிச்சம்
கிடைக்காமல்
சிலரின் வாழ்க்கை
இருளில்


எல்லோருக்கும் நல்லவராகவே
இருக்க நினைத்தாலும்
சிலரின் பிம்பங்களுக்கு
கெட்டவர்கள் தான்


அழ இயலாத
தருணங்களில்
கவலை கோபமாகின்றது


சில மாற்றங்களை
மனது ஏற்க மறுத்தாலும்
அதுவே வலிகளோடு
கூடிய நிஜம்


நம்மிடம் பேசிட
நேரம் ஒதுக்காதவர்களிடம்
உணர்வுகளை
பகிர்ந்து கொள்ள நினைப்பது
முட்டாள் தனம்


பேசா
நொடிகள் கூட
துயரமாகி விடுகிறது
சில கண பொழுதுகளில்


இந்த உலகில்
எதுவும் நிரந்தரமில்லை
காலமும் சூழ்நிலையும்
எதையும் மாற்றும்
என்பதை அடிக்கடி
கற்றுத் தருகிறது
இந்த வாழ்க்கை


வெறுப்பதாக இருந்தால்
வெளிப்படையாகவே
சொல்லி விடுங்கள்
செயல்களின் மூலம்
சிதைக்காதீர்கள்


இறப்பை நோக்கி
தொடங்கிய
பயணத்தில் தான்
எத்தனை எத்தனை
முகமூடி முகங்கள்


எனக்கு நீ
உனக்கு நான்
காலமெல்லாம்
வாழ்வோம்
இனிதாக


மனதிற்கு பிடித்தவர்கள்
காயப்படுத்தும்போது
நமக்கு ஆதரவாக
வருவது
நம் கண்ணீர்
மட்டுமே


பொறாமையோ ஏக்கமோ
வயிற்றெரிச்சலோ
எதுவாகவேனும்
பெயரிட்டுக்கொள்ளுங்கள்
ஒருவரின் முழு அன்பையும்
பெற்றுக்கொண்டிருக்கும்
ஒருவரை கண்டால்
என்னில் உருவாகும்
இக்குணத்திற்கு


அர்த்தமற்ற வாதம்
என்றுணர்ந்த பின்
புன்னைகையுடன்
கூடிய மௌனமே
என் பதிலாய்
இருக்கக்கூடும்


முடியாமல் நீளும்
இரவுகளில்
முடிந்து போகும்
பல ஆசைகள்


தனிமை
சில நேரம்
நினைக்க வேண்டிய
விஷயங்களை
மறக்க வைக்கும்
பல நேரம்
மறக்க வேண்டிய
விஷயங்களை
நினைக்க வைக்கும்


மூழ்கினேனா
மூழ்கடிக்கபட்டேனா
இந்த கண்ணீரில்


சில வலிகளை
வார்த்தைகளால்
சுமக்க முடிவதில்லை
மனது மட்டுமே
சுமக்கிறது
எண்ணிலடங்கா
அர்த்தங்கள்
கொண்ட மொழி
மெளனம்


அலைகளில் கால்களை
நனைக்கும் போது
கிடைக்கும் சுகம்
நடு கடலில் கப்பலில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை


வாழ்வின்
ஒவ்வொரு தருணங்களும்
ஒவ்வொரு நிகழ்வுகளும்
கனவா நிஜமா
என்று அறியாமலேயே
சிதைக்கின்றோம்


நிஜங்களாலும்
நினைவுகளாலும்
நிரப்பப்பட்டதே
இந்த வாழ்வு


உன் பலத்தை
அனைவரிடமும் சொல்
உன் பலவீனத்தை
யாரிடமும்
சொல்லி விடாதே
அதையே
உன்னை வீழ்த்தும்
ஆயுதமாக பயன்படுத்துவார்கள்


மனதிற்கு பிடித்தவர்கள்
நம்மை
காயப்படுத்தும்போது
ஆதரவாக வருவது
நம் கண்ணீர் மட்டுமே


வலிக்கொண்ட
இதயத்தை தான்
மேலும் மேலும்
வார்த்தை என்னும்
வாள் வீசி
கிழிக்கிறார்கள்


உதாசினங்கள்
பழகிய பின்னர்
மனம் எதிலும்
ஆர்வம்
கொள்ளவதில்லை


காயபட்டவர்களிடம்
பேசும் அன்பான
வார்த்தைகள்
சிதைக்கப்பட்ட மரத்திற்க்கு
ஊற்றப்பட்ட நீர்


வெறுப்பூட்டும்
நினைவுகளை
மனதிலிருந்து
உதறி விட்டால்
வாழ்வின் பயணம்
இனிமையாய் மாறும்


இரவின் நிசப்தம்
என் தனிமையை ஆட்கொள்ளும்
சில நினைவலைகளால்
விழியோரம் துளிர்க்கும்
கண்ணீர் துளிகள்
என் தலையணைக்கே சொந்தம்


நீ அருகில் இல்லா
பொழுதுகள்
நீண்டு கொண்டே
போவதேனோ
என் தவிப்புகளை
அதிகமாக்கி வதைப்பதேனோ


என்னை விமர்சித்தால்
நான் கவலைபடுவதில்லை
என்னை விமர்சிக்கும்
அளவிற்கு நான் வளர்ந்து
இருக்கிறேன் அவ்வளவே


வலிகளோடு
வழியைத் தேடும்
பயணமே வாழ்க்கை


ஒரு காலத்தில்
அனைத்தையும்
நேசிக்கச் செய்ததும்
இந்த அன்புதான்
இன்று அனைத்தையும்
வெறுக்கச் செய்வதும்
அதே அன்புதான்


எண்ணங்களை
எழுத்தாக்குவதை விட
எதாரத்தங்களை
எழுத்தாக்கினால் மட்டுமே
கவனிக்கப்படுவீர்கள்


எல்லா வெறுமைகளையும்
ஏதோ ஒன்றினால்
நிரப்பி விடலாம்
இந்த மனதின்
வெறுமையை
எதை கொண்டு
நிரப்புவது


சில நேரங்களில்
சூழ்நிலையே
ஒருவரை
தவறாக சித்தரிக்கிறது


எதற்க்கும் முற்றுப்புள்ளி
என்பது
முடிவு என்றில்லை
முற்றுப்புள்ளி கூட
தொடர்ந்தால்
தொடர்ந்து செல்லும்
என்பதே


இழப்பை சந்திக்கும்
சூழ்நிலை வரும்
போது மனம் மரித்து
தான் போகிறது
சில கன பொழுதுகளில்
இழுப்புகளில்


தான் செய்யும்
தவறை மறைக்க
அடுத்தவர்கள்
செய்யும் தவறை
பெரிதாக்குகிறார்கள்
சிலர்


அன்பான வார்த்தைகள்
எல்லாம்
பொக்கிஷமாய் இன்று
நினைவுகளில் மட்டும்


கனவுகளாலும் நிஜங்களாலும்
நினைவுகளாலும் நிரப்பப்பட்டதே
இந்த வாழ்வு


வாழ்க்கையில்
இன்பத்தை நோக்கி
அடி எடுத்துவைக்க
நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
வலிகள் வழிமறித்து
கோர தாண்டவமாடி
செல்கிறது


நிராகரிப்பின் வலி
ஒருபொழுதும் நிராகரித்தவர்கள்
உணர வாய்பில்லை


வாழ்வின் அத்தனை
அபத்தங்களையும்
ஏற்றுக்கொண்டு
கடைசி வரை
போராடி வாழ்வதே
வாழ்க்கை


மிகவும் சவாலானது
நம்மைப் பற்றிய
பிறரது கற்பனைகளோடு
நாம் போராடுவது தான்
அதனால் தான் நான்
உங்கள் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டவளாய்
நானாகவே இருக்கிறேன்


எதற்க்கும் முற்றுப்புள்ளி
என்பது முடிவல்ல
முற்றுப்புள்ளி
கூட தொடர்ந்தால்
தொடரும் என்பதே


இங்கே
எழுதப்படாத
வரிகளெல்லாம்
வலிகளுக்குள்
புதைந்தே போனது


இதயம்
வலித்தாலும் சிரி
அது
உடைந்தாலும் சிரி


உலகத்தில் உள்ள
சித்ரவதைகெல்லாம்
செல்ல பெயர் வைத்தால்
அதன் பெயர் தான்
அன்பு


நிரந்தரமென்று எண்ணியதெல்லாம்
தற்காலிகமாகிப் போனது


சில நேரம் மற்றவர்களையும்
பல நேரங்களில் என்னையே
சோதிக்கும் ஆயுதம்
எந்தன் அறியாமை


என் தவறுகள்
மன்னிக்க பட்டிருந்தன
அவர்களின் தேவை
என்னால்
பூர்த்தியாகும் வரை


பதிலுக்கு பதில்
கேள்வி கேட்பவருக்கு
தீர்வு காணப்பட ஆர்வமில்லை
நீங்கள் அங்கிருந்து நகர்ந்து
செல்லவே அவர்களது விருப்பம்


கிடைத்தா
இடத்தை தக்கவைத்து
கொள்வது
முதல் முயற்சியை விட
கடினமானது


பல கனவுகளோடு
வாழ நினைத்து
கடைசியில்
எல்லாம் ஒரு
கனவாகவே போனது
வாழ்வில்


இருப்பதின் மகத்துவத்தை
இருக்கும்போதே
உணர்ந்திடுங்கள்
இழந்தப்பின்
உணரப்படுவதெல்லாம்
வலிகளின் உச்சமே


அன்பு
குறைய குறைய
குறைகள் மட்டுமே
பெரிதாக தெரியும்


நாம் நேசித்த
ஒரு உறவின் இழப்பு
ஆயுள் முழுதும்
மறக்க முடியாத
வலியை தந்து
நினைவுகளில்
நிலைக்கிறது


மாறினேனா இல்லை
மாற்றப்பட்டேனா
தெரியவில்லை
ஆனால்
நான் நானாக
இல்லை என்பதே
இங்கு பலரின்
மனநிலை


ஒருவரின் மனதை
மயிலிறகாக வருடுவதும்
நெருஞ்சிமுள்ளாக
குத்தி புண்ணாக்குவதும்
நாம் உதிர்க்கும்
வார்த்தைகள் தான்


உடைந்தழ முடியா
நேரங்களில்
கண்ணீரோடு
கூடிய புன்முறுவல்
மட்டுமே பதிலாக


ஆச்சரியத்தில் தொடங்கி
அலட்சியத்தில்
முடிகிறது
சில உறவுகள்


கற்பனையில் காவியம்
வடிக்க
நீ என் கற்பனையல்ல
என் நிஜம்


இமை மூடினாலே
கனவாக வந்து
கொ(ல்)கிறாய்
விழிகளுக்குள்


வெறுக்க
ஆரம்பித்துவிட்டால்
சிறு வார்த்தைகளில்
கூட ஆயிரம்
பிழைகள் தேடுவர்


வாழ்வில் புயலாய்
நுழைந்து அன்பெனும்
கோரதாண்டவம்
ஆடி நினைவென்னும்
துயரில் ஆழ்த்தி
நம்மை சின்னாபின்னமாக்கி
சென்றவர்களே அதிகம்


நம்மை ஒருவருக்கு
பிடிக்காமல் போனால்
நாம் செய்கின்ற
சிறு சிறு செயல்கள் கூட
அவர்களுக்கு
தவறாகத்தான் தெரியும்


உணர்வு பூர்வமான
புரிதல் கொண்ட
உறவுகள் மட்டுமே
நம்முடன் இறுதி
வரை பயணிக்கும்
புரிதல் இல்லாத உறவுகள்
பாதியில் விட்டு
விலகி செல்லும்


அன்பு என்றாலே
அழகு தான்
அதை நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
தரும் போது


இமை மூடினாலே
கனவாக வந்து
கொ(ல்)கிறாய்
விழிகளுக்குள்


நாம் நேசித்த
ஒர் உறவின்
இழப்பு
ஆயுள் முழுதும்
நினைவுகளில்
நிலைத்து
மறக்க முடியாத
வலியை
வந்துவிடுகிறது


சில நேசங்களை மறுத்தும்
சில நேசங்களை மறந்தும்
‌சில நேசங்களை மறைத்தும்
மரணித்து வாழ்கிறது
பல உள்ளங்கள்


மாறினேனா இல்லை
மாற்றப்பட்டேனா
தெரியவில்லை
ஆனால்
நான் நானாக
இல்லை என்பதே
இங்கு பலரின்


விருப்பங்களோடோ
விருப்பமின்றியோ
தொடர்கிறது
சில தனிமைகள்


எவர் மீதும்
அதீத உரிமை கொள்ளாதே
உன் எல்லை
இது தான்
என நிரூபிக்கும் போது
உடைவது மனமே
மரணமாய்


அன்பு என்பது
யாதெனில் முதலில்
யாதுமாகி நின்று
பின் யாரோவாகிப் போதல்


இப்போதெல்லாம்
ஒரு சிறிய மனமுறிவினால்
ஒரு சிறிய புரிதலின்மையால்
பிரிவுகள் நிகழ்கிறது


புரியாத அன்பு
தொடர்ந்தாலும்
முடிந்தாலும்
ஒன்று தான்


சில முற்றுப்புள்ளிகள்
முழு மனதுடன்
வைக்கப்படுவதில்லை
சில காலத்தின் கட்டாயம்
சில காயத்தின் கட்டாயம்


வாழ்வில் புயலாய்
நுழைந்து அன்பெனும்
கோரதாண்டவம்
ஆடி நினைவென்னும்
துயரில் ஆழ்த்தி
நம்மை சின்னாபின்னமாக்கி
சென்றவர்களே அதிகம்


வாழ்க்கை
என்றும் எளிதல்ல
எல்லாவற்றையும்
தாங்கும் இதயத்திற்கு
வலிகள் புதிதல்ல


மனக்கடலில்
நின் நினைவலைகள்
ஓயாது ஓலமிட்டு
கொல்கிறது


கேள்விகள் சத்தமாக
கேட்கும் இடத்தில்
பதில்கள் திமிராக
சொல்வதில் தவறு
ஏதும் இல்லையே


புரியாத அன்பு
தொடர்ந்தாலும்
முடிந்தாலும்
ஒன்று தான்


பிரிவெனும் நரகத்தில்
உழன்று கொண்டிருக்கும் அவள் மனதில்
தாங்கிட முடியா
வலியின் உணர்வுகள்


தனிமையில்
இருக்கும்
அவள் விழிகளில்
பெருமழையின்
அடர்த்தி


அலட்சியம் காட்டும்
இடத்தில்
நம் அருமையை
சொல்லி புரிய
வைப்பதை விட
அவர்களை விட்டு
விலகி செல்வதே மேல்
எங்கு அலட்சியம்
இருக்கிறதோ
அங்கு நமக்கான
மதிப்பு இருக்காது


சில வரிகளில்
கூறப்படும் வலிகளின்
ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
அனுபவப்பட்டவர்களை தவிர


தொட முடியா
தொலைவானமாய்
தொலைவினில்
நீ தொட்டு விட
வேண்டுமென்றே
பேராசையில்
என் மனது


அணைத்து கொள்ளும்
அன்பே
மாபெரும் ஆறுதல்


Related